சாராயம் விற்ற பெண்ணும் சாவு
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் அருகே விஷச் சாராயம் குடித்து இறந்த 13 பேரில் சாராயம் விற்ற ஒரு பெண்ணும் அடக்கம்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நத்தம் கிராமத்தில் கூலித் தொழிலாளர்கள் சிலர் மதுக் கடையில்சாராயம் வாங்கிக் குடித்தனர்.
சாராயத்தைக் குடித்தவுடன் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். மேலும் 9 பேர் மருத்துவமனையில் இறந்தனர்.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் மூன்றுபேர் உயிரிழந்தனர். இன்று காலை இறந்தவர்களில் சாராயம் விற்ற பெண்ணும் ஒருவர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட கலெக்டர் தங்கசாமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணைநடத்தினர்.












Click it and Unblock the Notifications