கண்டக்டர்கள்- பயணிகள் மோதல்
சென்னை:
தமிழகம் முழுவதும் அரசு அறிவித்துள்ள கட்டண உயர்வுகள் இன்று அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில்பஸ் கண்டர்களுக்கும், பயணிகளுக்கும் இடையில் பல்வேறு இடங்களில் மோதலும் வாக்குவாதமும் ஏற்பட்டது.இதனால், பல பஸ்கள் தாமதமாகச் சென்றன.
தமிழக அரசின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் விலை, அரிசி விலை உட்படபல அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (சனிக்கிழமை)முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை சென்னையில் பஸ்கள் ஆரம்பித்தவுடன், கண்டர்கள் புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளகட்டணத்திற்கு பயணச் சீட்டு வாங்குமாறு பயணிகளிடம்கூறினர். ஆனால், பழைய டிக்கெட்டுகளைக் கொடுத்தனர்.
இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்புத் தெரிவித்தனர். பழைய கட்டணத்தைத் தான் கொடுப்போம் என்று பிடிவாதம்பிடித்தனர். இதனால் கண்டக்டர்களுக்கும், பயணிகளுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் பல பஸ்கள் தாமதமாயின.












Click it and Unblock the Notifications