புலிகள் மீதான தடையை நீக்க முடியாது: சந்திரிகா
கொழும்பு:
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க முடியாது என்று இலங்கை அதிபர் சந்திரிகா கூறினார்.
இதற்கு இலங்கை அதிபர் சந்திரிகா மறுத்துவிட்டார். இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
புலிகள் அமைதிப் பாதைக்குத் திரும்பி, நாட்டில் வன்முறை ஒழிந்து மீண்டும் அவர்கள் போராட்டத்திற்கு திரும்பமாட்டார்கள் என்ற நிலை உருவாகும் போதுதான் அந்த இயக்கத்தின் மீதான தடை நீக்கப்படும்.
ஆனால் செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகள் மீதுஅமெரிக்கா எடுத்துவரும் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டுதான் புலிகள் தங்கள் இயக்கத்தின் மீதானதடையை விலக்க வேண்டும் என்று கோருகிறார்கள்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றால், யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளபாதுகாப்புப் படையை வாபஸ் பெறுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே புலிகளுக்குவாக்குறுதி அளித்துள்ளார்.
எந்த ஒரு பொறுப்பான அரசும் இவ்வாறு தொடர்ந்து போராட்டம் நடக்கும் பகுதிகளில் இருந்து பாதுகாப்புப்படையை வாபஸ் பெறாது என்று அந்த அறிக்கையில் சந்திரிகா கூறியுள்ளார்.
இதற்கிடையில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிவெற்றிபெற்றால், தமிழர் பகுதியை ஆளும் பொறுப்பை புலிகளிடம் ஒப்படைப்பதாக ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆளும் கட்சியான சந்திரிகாவின் மக்கள் கூட்டணிக் கட்சியும் இவ்வாறு தான் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சாட்டிவருகிறது.
இதை உண்மையாக்கும் வகையில் பிரபாகரனும், "நியாயத்திற்காகப் போராடும் இயக்கத்திற்கு வாக்களியுங்கள்.இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்களுக்கு நீதிகிடைக்கும் வகையில் சிங்கள மக்கள் வாக்களிக்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.
பிரபாகரனின் பேச்சை விமர்சித்துப் பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கதிர்காமர் கூறுகையில்,பிரபாகரனின் பிரிவினைவாதப் பேச்சுக்கு மக்கள் செவி சாய்யக்கக் கூடாது என்றார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications