எம்.எல்.ஏ. ஆன பிறகே முதல்வராக ஜெ. முடிவு
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆன பிறகே முதல்வர் பதவியை ஏற்கஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தலில் நிற்கத் தடையாக இருந்த டான்சி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார் ஜெயலலிதா. இதனால்உடனடியாக முதல்வர் பதவியை ஏற்பார் என்று பேச்சு எழுந்துள்ளது.
ஆனால் அதிமுக வட்டாரத்தில் வேறு மாதிரியாக பேச்சு அடிபடுகிறது. முதல்வர் பன்னீர் செல்வத்தை ராஜினாமாசெய்து விட்டு உடனடியாக முதல்வர் பதவியில் அமர ஜெயலலிதா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
முறையாக தேர்தலில் நின்று, தன்னைத் தேர்தலில் நிற்க விட முடியாமல் தடுத்தவர்களுக்கு பதிலடியாக எம்.எல்.ஏ.ஆன பிறகே முதல்வர் பதவியில் அமர ஜெயலலிதா விரும்புவதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக ஏற்கனவே ஆண்டிப்பட்டி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்ததங்கத் தமிழ்ச்செல்வன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவர் தற்போது தேனி மாவட்ட அதிமுகசெயலாளராக இருக்கிறார்.
பிப்ரவரி மாதம் சென்னை சைதாப்பேட்டை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தோடு சேர்த்துஆண்டிப்பட்டிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடப் போவதாக ஜெயலலிதாவே உறுதியுடன் கூறியுள்ளார். தேர்தலில் நின்று மகத்தானவெற்றியைப் பெற்ற பின்னரே கோட்டையில் நுழையவும் அவர் முடிவு செய்துள்ளார்.
எனவே, இப்போதைக்கு பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய மாட்டார் என்று கூறப்படுகிறது. இன்னும் இண்டுமாதங்களுக்கு அவரே முதல்வராக நீடிப்பார் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications