அதிமுக கூட்டணியிலிருந்து விலகினார் அப்துல் லத்தீப்
சென்னை:
அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக இந்திய தேசிய லீக் கட்சி அறிவித்துள்ளது. பொடோ சட்டத்தை அதிமுகஆதரிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கட்சித் தலைவர் அப்துல் லத்தீப் கூறியுள்ளார்.
சென்னையில் ஒருங்கிணைந்த முஸ்லீம்கள் என்ற அமைப்பு ஒன்றின் சார்பில் இப்தார் விருந்து வழங்கப்பட்டது.இதில் இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் அப்துல் லத்தீப் கலந்து கொண்டார்.
அதில் கலந்துகொண்டு பேசுகையில், பொடோ சட்டத்தை அதிமுக ஆதரித்துள்ளது. சிறுபான்மை மக்களுக்குபெரிய அடியாக அமைந்துள்ள இந்த சட்டத்தை ஆதரிக்கும் அதிமுக கூட்டணியில் நீடிப்பதை நாங்கள்விரும்பவில்லை.
தமிழகத்தில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் ஒன்றுபட்ட முஸ்லீம்கள் என்ற இந்த அமைப்பில் கட்சி சார்பின்றிஇணைய வேண்டும். அப்போதுதான் முஸ்லீம் மக்களின் பிரச்சினைகள், குறைகளை ஒரே குரலில் வைத்து போராடமுடியும் என்றார்.
அப்துல் லத்தீப் வாணியம்பாடி தொகுதியில் அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் நின்றுபோட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications