பந்த்தைக் கைவிட எதிர்க் கட்சிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள்
சென்னை:
தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியைச் சீர்செய்யய கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என்பதைப்புரிந்து கொண்டு எதிர்க்கட்சிகள் பந்த்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
கடந்த 1ம் தேதி முதல் பஸ், மின்சாரக் கட்டணங்கள், பால் விலை, அரிசி விலை ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன.இந்த விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 7ம் தேதி காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்டகட்சிகள் கூட்டாக பந்த் நடத்தத் திட்டமிட்டுள்ளன.
இதுகுறித்து சென்னையில் நேற்று (திங்கள்கிழமை) பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு தொலை நோக்குப் பார்வையில் செயல்படாததால், எந்தத் தொழிலும்வளர்ச்சியடையவில்லை.
நிதி நிலையைச் சீர்செய்யவும் இல்லை. அதற்கான முயற்சியை மேற்கொள்ளவும் இல்லை. இந்நிலையில் மக்கள்ஜெயலலிதாவின் ஆட்சியை விரும்பித் தேர்ந்தெடுத்ததால், நிதிச்சுமை அதிமுக அரசின் மீது விழுந்துள்ளது.போக்குவரத்துத் துறையிலும் ரூ.2,035 கோடி நட்டத்தை திமுக அரசு ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.
தற்போது பஸ்-மின்சாரக் கட்டணங்கள் சற்று உயர்த்தப்பட்டுள்ள போதிலும், மற்ற மாநிலங்களைவிடபொருட்களின் விலை குறைவாகத் தான் உள்ளது. தமிழ்நாட்டில் எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள நட்டத்தைச்சீர்செய்யத்தான் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே விலை உயர்வைக் குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை.
சட்டசபையில் இதுகுறித்து வெள்ளை அறிக்கை வைத்தோம், அப்போது எல்லாத் தோழமைக் கட்சிகளும் இந்தச்சீர்கேடுகள் பற்றித் தெளிவாகப் பேசியிருக்கிறார்கள்.
கடந்த கால ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ள சீர்கேடுகளைச் சரிசெய்யத்தான் இது போன்ற நடவடிக்கைகள்எடுக்கிறோம். இதை அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் நன்கு அறிவார்கள். இதுபோன்ற நடவடிக்கைஎடுக்காவிட்டால் வருங்காலத்தில் அரசாங்கத்தை நடத்துவதே கேள்விக்குறி ஆகிவிடும்.
எனவே பொதுமக்கள் இதையெல்லாம் உணர்ந்து எதிர்க்கட்சிகள் நடத்தும் பந்த்துக்கு ஆதரவு தரக்கூடாது. இந்தஅரசின் நிலையை அரசியல் கட்சிகளும் உணர்ந்து பந்தைக் கைவிட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications