For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர் கட்சிகள் பெரும் வெற்றி

By Staff
Google Oneindia Tamil News

யாழ்பாணம்:

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் பெரும் வெற்றிபெற்றுள்ளன.

திரிகோணமலையில் இந்தக் கூட்டணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

யாழ்பாணத்தில் 6 இடங்களிலும், வன்னியில் 4 தொகுதிகளிலும், மட்டக்களப்பில் 3 இடங்களிலும் இந்தக்கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. திரிகோணமலையில் 1 இடத்திலும் அம்பாரை மாவட்டத்தில் 1 இடத்திலும்இக் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் எனத் தெரிகிறது.

மொத்தம் 15 இடங்கள் வரை இந்தக் கூட்டணிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மட்டக்களப்பிலும் வன்னியிலும் இந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் மேலும் 2 இடங்களில் வென்றிருக்கமுடியும். ஆனால், அதை ராணுவம் தடுத்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள்வாக்களிக்க ராணுவம் அனுமதிக்கவில்லை.

வாக்குச் சாவடியை அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வைத்துவிட்டு புலிகள் கட்டுப்பாட்டில் உள்ளபகுதியைச் சேர்ந்த தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுத்துவிட்டது ராணுவம். இதனால், 2 தொகுதிகளை தமிழர்கட்சிகள் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

யாழ்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஓரிடமும் ஈழ மக்கள் விடுதலைக் கட்சிக்கு 2 இடங்களும்கிடைத்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X