இந்தியாவில் ஜப்பான் உதவியுடன் சாப்ட்வேர் வளாகம்

Subscribe to Oneindia Tamil

ஒசாகா (ஜப்பான்):

பிரதமர் வாஜ்பாய் 5 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.

கடந்த பிப்ரவரி மாதமே சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது குஜராத்மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து அந்த பயணம் ரத்தானது.
இந்நிலையில், நேற்று அரசு முறைப்பயணமாக ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்.

போக்ரானில் அணுகுண்டு சோதனை செய்ததையடுத்து ஜப்பானும் இந்தியா மீது பொருளாதார தடைவிதித்திருந்தது. இப்போது அந்தத் தடை முழுவதுமாக விலக்கப்பட்டுவிட்டது.

ஜப்பான் புறப்படுவதற்கு முன்பு விமான நிலையத்தில் பேட்டியளித்த வாஜ்பாய்,

தீவிரவாதத்தை ஒடுக்கவும், இருநாடுகளுக்கிடையே பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்ஆகிய துறைகளில் முக்கிய உடன்பாடுகள் ஏற்படும் என்றார். அவரை மூத்த அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்.

நேற்றிரவு ஜப்பான் போய்ச் சேர்ந்த வாஜ்பாய் இன்று காலை (சனிக்கிழமை) ஒசாகா நகருக்குச் சென்றார். அவரைஅந் நகர தொழிலதிபர்கள் வரவேற்றனர். அவர்கள் மத்தியில் பேசிய வாஜ்பாய், இந்தியாவின் மீதானபொருளாதாரத் தடையை நீக்கியதற்காக நன்றியைத் தெரிவித்தார்.

பிறகு தொழிலதிபர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையில் பல உடன்பாடுகள் ஏற்பட்டன. இந்தியாவில் ஜப்பானியநிதி உதவியுடன் ஒரு சாப்ட்வேர் வளாகம் அமைக்கும் உடன்பாடு கையெழுத்தானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+