For Daily Alerts
Just In
ஆரணி அருகே வேன்-பஸ் மோதல்: 5 பேர் பலி
ஆரணி:
ஆரணி அருகே வேனும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
வேலூரிலிருந்து ஒரு வேனில் 10 பேர் பாண்டிச்சேரிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
இந்த வேன் ஆரணி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது.
இவ்விபத்தில் வேன் முழுவதுமாக உருக்குலைந்து போனது. வேனில் பயணம் செய்தவர்களில் 5 பேர் உடல் நசுங்கிஉயிரிழந்தனர். இவர்கள் 5 பேரும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படுகாயமடைந்த மற்ற 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]