For Quick Alerts
For Daily Alerts
Just In
ரீட்டா கற்பழிப்பு வழக்கு: அரசு டாக்டர் சஸ்பெண்ட்
விழுப்புரம்:
போலீசாரால் கற்பழிக்கப்பட்ட ரீட்டாவிற்கு செஞ்சி அரசு மருத்துவமனை டாக்டர் போதுமான சிகிச்சைஅளிக்கவில்லை என்பதால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
செஞ்சி கிளைச்சிறையில் சென்னையைச் சேர்ந்த ரீட்டாவை கற்பழித்தது தொடர்பாக ஐ.ஜி. திலகவதி விசாரணைநடத்தி அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து செஞ்சி கிளைச்சிறையில்பணிபுரிந்த சிறைக்காவலர்கள் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு, அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, செஞ்சி சிறையிலிருந்து ரீட்டாவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் இளங்கோவன் ரீட்டாவிற்கு போதுமான சிகிச்சை அளிக்கவில்லைஎன்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, டாக்டர் இளங்கோவனை சஸ்பெண்டு செய்து சுகாதாரத்துறை இயக்குனர் பழனியப்பன்உத்தரவிட்டார்.
Comments