ஈரோட்டில் ரூ.3 கோடி மோசடி: நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஈரோடு:
ஈரோட்டில் கரூர் வைஸ்யா கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் ரூ.3 கோடி மோசடி செய்ததையடுத்து, மக்கள்அந்நிறுவனத்தினை நேற்று (சனிக்கிழமை) இரவு முற்றுகையிட்டனர்.
தமிழ்நாட்டில் நிதிநிறுவனம் மக்களை மோசடி செய்வது என்பது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் மக்கள்நிதிநிறுவனத்தில் முதலீடு செய்வதை நிறுத்துவதாக தெரியவில்லை.
ஈரோட்டில் சுமார் 20 ஆண்டுகளாக கரூர் வைஸ்யா கார்ப்பரேஷன் என்னும் நிறுவனம் நடைபெற்று வருகிறது.இங்கு மக்கள் சுமார் ரூ.3 கோடி வரை முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் அந்நிறுவனம் மோசடி செய்ததாக மக்கள் அந்நிறுவனத்தின் முன் நேற்றிரவு 12 மணி வரைமுற்றுகையிட்டு தங்கள் பணத்தை தருமாறு கேட்டனர்.
பணத்தை முதலீடு செய்த காலம் முடிந்துவிட்ட நிலையில் பணத்தை மக்களுக்கு திருப்பி கொடுக்காமலும், மேலும்அதற்குரிய வட்டியை கூட கொடுக்காமல் இருந்துள்ளனர். பணம் கேட்டதற்கு அந்நிறுவன அதிபர் சரியான பதிலைகூறவில்லை என்று மக்கள் கூறினர்.
இந்நிலையில் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்று மக்களை சமாதனம் செய்து அனுப்பியுள்ளனர். மேலும்அந்நிறுவன அதிபரிடம் மோசடி குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications