போலீசார் தண்டிக்கப்படவேண்டும் என்கிறார் இல.கணேசன்
சென்னை:
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமான போலீசார் தண்டிக்கப்பட வேண்டும் என்று மாநிலபாஜக செயலாலளர் இல. கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் சரியானதுஎன்று தமிழக அரசு கூறியிருந்தது.
இதைக் கண்டித்து தமிழக பாஜக செயலாளர் இல.கணேசன் கூறியிருப்பதாவது:
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதலை தமிழக அரசு நியாயப்படுத்தியிருப்பதுகண்டிக்கத்தக்கது.
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார் கணேசன்.
இதுகுறித்து பார் கவுன்சில் தலைவர் ஆர். தனபால் ராஜ் கூறுகையில், சட்டக்கல்லூரி மாணவர்களை போலீசார்தாக்கியது கண்டிக்கத் தக்கது.
மாணவர்களைத் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு பார் கவுன்சில் சார்பில் தமிழக முதல்வரைச்சந்தித்து மனு கொடுக்கவும் தயாராக உள்ளோம் என்றார் தனபால் ராஜ்.