கேரளாவில் பாஜக பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் இன்று (திங்கள்கிழமை) பாஜகவும், விசுவ ஹிந்து பரிஷத்தும் நடத்திய பந்தினால் அங்குஇயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தினமான கடந்த வியாழக்கிழமை கேரளாவில் முஸ்லீம்கள் பந்த் நடத்தினர். இந்த பந்த்தின்விளைவு வெள்ளிக்கிழமையும் எதிரொலித்தது. அன்று முஸ்லீம்கள் பல கடைகள், வாகனங்களை அடித்துநொறுக்கினர்.

மேலும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களையும் கல் வீசித் தாக்கினர். உச்சகட்டமாக பாஜக அலுவலகம்ஒன்றையும் முஸ்லீம்கள் தீயிட்டு கொளுத்தினர்.

இதைக் கண்டித்து பாஜகவினரும் விசுவ ஹிந்து பரிஷத்தும் இன்று பந்த் நடத்துகின்றன. காசர்கோடு மாவட்டத்தில்உள்ள ஹோஸ்தூரில் கலவரத்தை தடுப்பதற்காக போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டுள்ளனர்.

மேலும் ஆழப்புழை, கோழிக்கோடு, திருவனந்தபுரத்தில் பல பஸ்களின் மீது கலவரக்காரர்கள் கல்லெறிந்துதாக்கினர். இதனால் கேரளாவில் பல இடங்களில் கடைகளும், வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டதாக கேரளபோலீசார் கூறினர்.

இதையடுத்து கேரளா முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் ஓடவில்லை. அதேபோல் கடைகளும் மூடப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

கலவரம் பரவும் அபாயம் உ ள்ள அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை725 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐயப்ப பக்தர்களைத் தாக்கியவர்களும் கைது செய்யப்பட்டிருப்பதாக கேரள முதல்வர் ஏ.கே. அந்தோனிதெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+