கோபாலுக்கு முன் ஜாமீன்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு தொடர்பாக, "நக்கீரன்" ஆசிரியர் கோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமார், தாளவாடி என்னும் இடத்திற்கு அருகில், சந்தன வீரப்பனால் கடத்திசெல்லப்பட்டார். அப்போது அரசு தூதராக நியமிக்கப்பட்ட கோபால், ராஜ்குமாரை மீட்க பலமுறை பேச்சுவார்த்தைநடத்துவதற்காக காட்டுக்கு சென்றார்.
இந்நிலையில், ராஜ்குமார் கடத்தலில் தொடர்பு இருப்பதாக நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து கோபாலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதனால் தாளவாடி போலீசார் எந்நேரமும் தன்னைக் கைது செய்யலாம் என்று கருதிய கோபால் முன்ஜாமீன் கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி கனகராஜ், கோபாலுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர் தன் தீர்ப்பில்கூறியுள்ளதாவது:
ராஜ்குமார் கடத்தல் வழக்கில் கோபால் சேர்க்கப்படவில்லை என்று அரசு தரப்பினர் கூறுகின்றனர்.
அப்படி சேர்க்கும் பட்சத்தில், பத்து நாட்களுக்குள் கோபால், 25,000 ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், அதேதொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே கர்நாடக போலீசாரிடம் கைதான நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்துக்கு நேற்று ஜாமீன்நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.