For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுவை துணை சபாநாயகரானார் ஏ.வி. சுப்பிரமணியன்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி துணை சபாநாயகராக ஏ.வி. சுப்பிரமணியன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பாண்டிச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் துணை சபாநாயகராக இருந்தசந்திரகாசு அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து அவர் கடந்த நவம்பர் மாதம் துணை சபாநாயகர் பதவியைராஜினாமா செய்தார்.

எனவே துணை சபாநாயகர் தேர்தல் இன்று (புதன் கிழமை) நடைபெறும் என்றும், போட்டியிட விருப்பம் உள்ளஎம்.எல்.ஏக்கள் மனு தாக்கல் செய்யலாம் என்றும் சட்டசபை செயலர் சிவப்பிரகாசம் அறிவித்திருந்தார்.

காங்கிரஸ் சார்பில் ஏ.வி. சுப்பிரமணியம் திங்கட்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார். மனு தாக்கல் செய்வதற்கானகெடு நேற்று பகல் 12 மணியுடன் முடிவடைந்தது.

வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இன்று காலை சட்டசபை கூடியவுடன், கூட்டத்தில் முறைப்படி அறிவிக்கப்பட்டு துணை சபாநாயகராகசுப்பிரமணியன் பொறுப்பேற்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X