ஜெ.க்கு பார்வர்ட் பிளாக் ஆதரவு
மதுரை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளிக்க அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சி முடிவு செய்துள்ளது.
மதுரையை அடுத்த செக்கனூரணி என்னுமிடத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில அளவிலானமாநாடு நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் எம்.எல்.ஏ. சந்தானம் கட்சியின் பொது செயலாளராக மீண்டும்தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது நடந்த தாக்குதல் கண்டனத்திற்குரியது. சட்டக்கல்லூரி மாணவர்கள்மீதான வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
டில்லியில் உள்ள பெரியார் மையம் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். அந்த இடத்தில் மீண்டும்பெரியார் மையம் நிறுவ வேண்டும்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வுகளை மறு பரிசீலனை செய்யவேண்டும்.
ஆண்டிப்பட்டியில் நடைபெற இருக்கும் இடைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும், போன்றபல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications