For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தோரா போரா மலைகளில் பி-52 விமானங்கள் குண்டு மழை

By Staff
Google Oneindia Tamil News

தோரா போரா:

அல்-கொய்தா படையினர் சரணடையத் தவறியதையடுத்து, தோரா போரா மலைப் பகுதிகளில் இன்று(புதன்கிழமை) அமெரிக்காவின் பி-52 ரக விமானங்கள் குண்டுகளை மழையாகப் பொழிந்தன.

இம்மலைப் பகுதிகளில் உள்ள அல்-கொய்தா அமைப்பினர் இன்று காலை 9 மணிக்கு சரணடையப் போவதாகஒப்புக் கொண்டிருந்தனர். ஆனால் அதன்படி அவர்களிடம் இதுகுறித்து எந்தவிதமான தகவலும் வரவில்லை.

இதையடுத்து இன்று காலை 10 மணிக்கெல்லாம் பி-52 விமானங்கள் தாக்குதலைத் தொடங்கிவிட்டன.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளிலேயே பெரும்பாலான குண்டுகள் வீசப்பட்டன.

அல்-கொய்தாவினர் புதிய நிபந்தனை:

இதற்கிடையே சரணடைவதற்கு அல்-கொய்தாவினர் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

சவுதி அரேபியா மற்றும் சில நாட்டுத் தூதர்கள் முன்னிலையில் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடம் சரணடையஅனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X