இனி, கலெக்டர் அலுவலகங்களிலேயே பாஸ்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும், தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் விற்கவும்,பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வாங்கவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள மதிவதனன் நிருபர்களிடம் கூறுகையில்,

பாஸ்போர்ட் வாங்குவதற்கான சிறு, சிறு சந்தேகங்களை கேட்பதற்காக மக்கள் பல நகரங்களில் இருந்தும் சென்னைஅல்லது திருச்சிக்கு வர வேண்டி உள்ளது. பொது மக்களின் இந்த குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கைஎடுக்கப்படும்.

அதன்படி இனிமேல் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள்விற்கப்படும். இதற்காக மாநில உள்துறை செயலாளருடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.

மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலேயே பூர்த்தி செய்யப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறுவதற்காகஒவ்வொரு கலெக்டர் அலுவலகங்களிலும் மாவட்ட பாஸ்போர்ட் செல் அமைக்கப்படும்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அதிகாரி, போலீஸ் அதிகாரி ஆகியோர் பாஸ்போர்ட் விண்ணப்பத்தைசரி பார்த்து மாநில சி.ஐ.டி. அலுவலகத்திற்கும், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்புவர்.

இது நான்கு வாரங்களுக்குள் முடிவடைந்து விடும். இதற்காக ரூ.200 வசூலிக்கப்படும். ஆன்லைன் மூலம்பாஸ்போர்ட் குறித்தான சந்தேகங்களை தீர்த்து வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது பாஸ்போர்ட் கிடைக்க 45 நாட்கள் ஆகின்றன. இனிமேல் 10 நாட்களில் பாஸ்பாாேர்ட் கிடைக்க ஏற்பாடுசெய்யப்படும். இனி அனைத்து மாவட்ட தலைநகரங்கள், தாலுகாக்களில் கிடைப்பதற்கான வழிவகைகள் செய்துவருகின்றோம் என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+