For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டக் கல்லூரி மாணவர்களிடம் 4 நபர் கமிஷன் விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சட்டக்கல்லூரி மாணவர்கள் மீதான போலீசார் நடத்திய தாக்குதலை விசாரிக்க உயர் நீதிமன்றம் அமைத்தவிசாரணை குழு நேற்று (சனிக்கிழமை) விசாரணையை தொடங்கியது.

டிசம்பர் 7ம் தேதி அன்று சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை பற்றி விசாரிக்கஉயர் நீதிமன்றம் 4 பேர் அடங்கிய விசாரணைக் குழுவை அமைத்தது.

இந்த குழுவில் முன்னால் டி.ஜி.பி.லட்சுமி நாராயணன், பேராசிரியர் சந்திரசேகர், வக்கீல்கள் வெங்கடாஜலபதிமற்றும் வைகை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

விசாரணைக்குழுவினர் நேற்று மதியம் 12.50 மணிக்கு சென்னை அரசு பொது மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

மேலும் தற்போது மருத்துவமணையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும்கேட்டறிந்தனர்.

இந்த குழுவினர் சட்டக்கல்லூரி விடுதி முன்பு உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களிடமும் விசாரணை நடத்தஉள்ளனர். நால்வர் குழுவின் இந்த விசாரணையின் போது வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த குழுவினர் தங்களது விசாரணை அறிக்கையை வரும் செவ்வாய்க்கிழமை (டிச.18) உயர் நீதிமன்றத்தில்சமர்ப்பிக்க உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X