நாடாளுமன்ற தாக்குதல்: கோவை கைதிகள் உண்ணாவிரதம்
கோயம்புத்தூர்:
நாடாளுமன்றம் மீது நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை கண்டித்து கோயம்புத்தூர் மத்திய சிறையில் 800 கைதிகள்நேற்று (சனிக்கிழமை) உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாவிரத போராட்டம் கோயம்புத்தூர் மத்திய சிறையில் வழக்கமாகிவிட்டது. அதிகாரிகளை கண்டித்துஅல்-உம்மாவினரும், தமிழக அரசை கண்டித்து தமிழ் தீவிரவாதிகளும் அடிக்கடி உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
நேற்று காலை சிறை நிர்வாகம் கைதிகளுக்கான உணவை வழக்கம் போல வழங்கியது. பல்வேறு பிளாக்குகளில்அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சுமார் 800 பேர் உணவை பெற மறுத்து திடீர் உண்ணாவிரத போராட்டத்தில்ஈடுபட்டனர்.
சிறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை செய்ததில், டில்லியில் நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்கியதைகண்டித்து இன்று ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இரவு வரை உணவைஏற்றுக்கொள்ளமாட்டோம் எனவும் பிடிவாதம் பிடித்தனர்.
கைதிகளுடனான சமாதன பேச்சு எடுபடாத நிலையில், அதிகாரிகள் திரும்பிவிட்டனர். அமெரிக்காவை கண்டித்துஅல்-உம்மாவினர் சில நாட்களுக்கு முன் நடத்திய உண்ணாவிரத போராட்டத்துக்கு, பதிலடி கொடுப்பதற்காகதற்போது இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கலாம் என உளவுத் துறையினர் சந்தேகப்படுகின்றனர்.
சிறையில் உள்ள இரு பிரிவினரும் மாறி, மாறி உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது சிறை அமைதிக்கு உதந்தது அல்லஎன மத்திய, மாநில உளவுத் துறைகள் எச்சரிக்கை செய்துள்ளன.