For Daily Alerts
Just In
தமிழர் பாரம்பரியத்தை தமிழக அரசே அழிக்கிறது: இளங்கோவன் குற்றசாட்டு
சென்னை:
கண்ணகி சிலையை அகற்றியதன் மூலம் தமிழர்களின் பாரம்பரியத்தை அதிமுக தலைமையிலான அரசு அழிக்கிறதுஎன்று குற்றம் சாட்டியுள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
இதுகுறித்து இளங்கோவன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய நாதரிகத்தையும், தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியத்தையும்விளக்குவது போல் அமைந்தது சிலப்பதிகாரம்.
மாமன்னனையே எதிர்த்துப் போராடி நீதி சாஸ்திரத்தை நிலை நாட்டிய பெண் கண்ணகி. அப்பேர்பட்ட கண்ணகிசிலையை ஜோசியர்கள் கூறியதற்காக அகற்றியதன் மூலம், தமிழர் பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றைதமிழக அரசே அழித்து விட்டது.
கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்காவிட்டால் மற்ற கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸும் போராடும்என்று இளங்கோவன் கூறியுள்ளார்.
Comments
Story first published: Wednesday, May 1, 2002, 5:30 [IST]