சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை:
சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
விடுதிக்குள் புகுந்து போலீசார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த 8 நாட்களாகஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்.
நேற்று கொட்டும் மழையில் கூட அவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த நால்வர் குழு இன்று விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்தது.சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டது உண்மைதான் என்றும் இதற்குக் காரணமான போலீசார் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாகக் கூறினர்.
நீதிமன்றத்தைப் புறக்கணித்த வழக்கறிஞர்கள்
இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவர்களை தாக்கிய போலீசாரை கைது செய்யக்கோரி தமிழகம் மற்றும்புதுவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் கண்டோன்மென்ட் காவல் நிலையம் முன்பு போலீசாருக்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷம்எழுப்பினர். தஞ்சாவூர், திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களிலும் வழக்கறிஞர்கள்நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.
இதனால் இன்று நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications