For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேம்பால ஊழல்: கருணாநிதி, ஸ்டாலின் மீது விரைவில் நடவடிக்கை?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மேம்பால வழக்கில் விசாரணை முடியும் நிலை எட்டியுள்ளதால், கருணாநிதி, ஸ்டாலின், முன்னாள் தலைமைசெயலாளர் நம்பியார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் மீது எந்த நேரமும்நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தமிழக கூடுதல் டி.ஜி.பி. ரமணி தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

மேம்பால ஊழல் வழக்கு விசாரணை மிக தீவிரமாக நடந்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள், அரசுஅலுவலர்கள், காண்ட்ராக்டர்கள் உட்பட இதுவரை 80 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கருணாநிதி, ஸ்டாலின், நம்பியார் ஆகிய மூவரிடமும் முதற்கட்ட விசாரணை முடிந்து விட்டது. தேவைப்பட்டால்மீண்டும் விசாரணை நடத்தப்படும்.

மேம்பால ஊழல் வழக்கு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த வழக்கு குறித்து சேகரிக்கப்பட்டஆவணங்கள் சட்ட நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மற்றும் மேம்பாலம் கட்டப்பட்ட பொருட்களின்தரத்தையும் அறிய ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சட்ட நிபுணர்களிடமிருந்தும், ஆய்வகங்களிலிருந்தும் அறிக்கை வந்தவுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்படும். விசாரணை முடிவில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ, அந்த நடவடிக்கை கண்டிப்பாகஎடுக்கப்படும் என்றார் ரமணி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X