வங்கக் கடலில் புயல் சின்னம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருப்பதையடுத்து, தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது.
தமிழகத்தின் தென் கிழக்கே இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்உருவாகியுள்ளது.
இது மேலும் தீவிரமடைந்து புயல் சின்னமாக உருவாகும் என்று வானிலை ஆய்வு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
சென்னையில் பெய்து வரும் கடுமையான மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அடுத்த இரு நாட்களில் நல்ல மழை பெய்யும் என்றும் கடலோர மாவட்டங்களில்சூறாவளியுடன் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications