பெங்களூர் எக்ஸ்பிரஸில் முதல் வகுப்பு ரத்து: பயணிகள் எதிர்ப்பு
சென்னை:
சென்னை-தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் தூத்துக்குடி-பெங்களூர் பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில்முதல் வகுப்பு பெட்டி வசதியை ரத்து செய்யக் கூடாது என்று ரயில்வே நிர்வாகத்துக்கு பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
சென்னை-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் தூத்துக்குடியிலிருந்துபெங்களூருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தற்போது முதல் வகுப்பு பயணிகள் பெட்டி வசதியுடன்இயக்கப்படுகிறது.
இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஜனவரி 25லிருந்து முதல் வகுப்பு பயணிகள் பெட்டி ரத்து செய்யப்பட்டு அதற்குபதிலாக ஏசி முதல் வகுப்பு மற்றும் ஏசி இரண்டு அடுக்கு
இந்த ரயில்களில் முதல் வகுப்பு பெட்டியை ரத்து செய்யக் கூடாது என்று பயணிகள் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.முதல் வகுப்பு பயணக்கட்டணத்தை விட ஏசி பெட்டி கட்டணங்கள் அதிகமாக உள்ளன.
இதனால் பயணிகள் வசதி கருதி இந்த ரயில்களில் முதல் வகுப்பு பெட்டி வசதியை ரத்து செய்யக் கூடாது என்றுபயணிகள் ரயில்வே நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications