தமிழர் பகுதிகளில் தடைகள் நீக்கம்: இலங்கை நடவடிக்கை
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை வழி வகுக்கும் வகையில் அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளவடக்கு-கிழக்கு பகுதிகளில் அமலில் உள்ள பொருாதாரத் தடைகளை நீக்க அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் விக்கிரமசிங்கே இன்று (புதன்கிழமை) அறிவித்தார்.
விடுதலைப்புலிகளும், இலங்கை ராணுவமும் டிசம்பர் 24ம் தேதியிலிருந்து போர் நிறுத்தத்தை அறிவித்து போரைநிறுத்தியுள்ளன.
இந்நிலையில் விக்கிரமசிங்கே நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:
இலங்கையில் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு நார்வே சமாதானக்குழுவிடம் கோரிக்கைவிடுத்துள்ளேன். சமாதானத்திற்கான தொடக்க பேச்சுவார்த்தை மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்பட்டு விடும்.
சமாதான பேச்சுவார்த்தை நிதானத்துடன் படிப்படியாக தான் நடை பெற வேண்டும். இந்த சமாதான பேச்சுவார்த்தைமுடிய ஒரு வருட காலம் கூட ஆகலாம். சமாதானப் பேச்சு வார்த்தைக்கு நிறைய தடைகள் வரலாம்.
பொருளாதாரத் தடைகள் தவிர்த்த பிற தடைகள் பிப்ரவரி மாதம் முதல் படிப்படியாக நீக்கப்படும் என்றார்.