கருணாநிதிக்கு போட்டியாக தமிழ் மாநாடு: தம்பிதுரை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கண்ணகி சிலை அகற்றப்பட்டதை கண்டித்து கருணாநிதி தலைமையில் நடக்கவுள்ள தமிழ் மாநாட்டுக்குபோட்டியாக, தமிழறிஞர்கள் மாநாட்டை நடத்தப் போவதாக கல்வி அமைச்சர் தம்பி துரை கூறியுள்ளார்.

சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து அகற்றிய கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ கோரி, திமுகதலைவர் கருணாநிதி தலைமையில் பல்வேறு தமிழறிஞர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும்மாநாட்டை வரும் 5ம் தேதி சென்னை சீரணி அரங்கத்தில் நடத்தப் போவதாக கருணாநிதி அறிவித்தார்.

இந்த மாநாட்டுக்கு போட்டியாக அரசு சார்பில் தமிழறிஞர்களை கொண்டு தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கை நடத்தப்போவதாக கல்வி அமைச்சர் தம்பிதுரை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் வழிக் கல்விக்கு வழிவகுக்கவும், தமிழை வளர்க்கவும், தமிழ் பண்பாட்டை உயர்த்தி நிலை பெறச் செய்யவும்ஜெயலலிதா தலைமையில் 1991-96ம் ஆண்டு நடந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் வகுத்து செயல்படுத்தினார்.

கருணாநிதி ஆட்சி செய்தபோது தமிழை நிலை நாட்ட என்ன நடவடிக்கை எடுத்தார். பொறுப்புள்ள பணியில்இருந்த போது, பொறுப்புள்ள பணிகளை செய்யாமல் பொழுதைப் போக்கி கொண்டு இருந்தார்.

இப்போது தனது துதிபாடிகளை தூண்டிவிட்டு, ஜெயலலிதா வழிநடத்தும் அரசுக்கு எதிராக தூபம் போட்டுகொண்டிருக்கிறார்.

தமிழ் வழிக் கல்விக்கு வழிவகுக்கவும், தமிழை வளர்க்கவும், தமிழ் பண்பாட்டைத் தழைக்க செய்யவும், வரும்ஜனவரி 2ம் தேதியன்று மாலை 5 மணிக்கு அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவணர் நூலகக் கட்டிடத்தில்தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தமிழறிஞர்கள், தமிழ்ப்பாவலர்கள், தமிழ் பற்றாளர்கள் அனைவரும் திரண்டு வந்து அன்னைத் தமிழின்ஆக்கத்துக்கு வழி காண வேண்டி அழைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+