இடைத் தேர்தலுக்குப் பின் கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதா வென்று முதல்வரான பிறகே இனி சட்டசபை கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சட்டசபை கூட்டத் தொடர் செப்டம்பர் 14ம் தேதியுடன் முடிந்த பிறகு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றநீதிபதி பரூச்சா தலைமையிலான பெஞ்ச் கடந்த செப்டம்பர் 21ம் தேதி தீர்ப்பளித்தவுடன் முதல்வர் பதவியிலிருந்துஜெயலலிதா விலகினார்.
ஒரு முறை ஒத்தி வைக்கப்பட்ட பின்பு ஆறு மாதத்துக்குள் மீண்டும் சட்டசபைக் கூட்டத்தை ஆளுநர் அறிவிக்கவேண்டும். அதாவது மார்ச் 13ம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும்.
இடைத் தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 24ம் தேதி வெளியாவதால், மீண்டும் ஜெயலலிதா முதல்வராகி மார்ச் முதல்வாரத்தில் மீண்டும் சட்டசபை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து சட்டசபையில் முதல்வராக அமரும் வாய்ப்பு பன்னீர்செல்வத்துக்கு கிடைக்காது என்றும்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications