For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேலைக்கு வராத பஸ் ஊழியர்களுக்கு "நோ" சம்பளம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போனஸ் அதிகம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் ஊழியர்கள் பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம் தரும்படிஉத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிக போனஸ் கேட்டு பஸ் போக்குவரத்து ஊழியர்களில் ஒரு பகுதியினர் கடந்த அக்டோபர் மாதம்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பணிக்கு வராத 16 நாட்களுக்கான சம்பளத்தை நிர்வாகம்பிடித்தம் செய்தது.

மேலும் ஒப்பந்த அடிப்படையில் தினக் கூலியாக வேலை பார்த்து வந்தவர்களில் போராட்டத்தில்ஈடுபட்டவர்களுக்கு மீண்டும் வேலை தர முடியாது என்று போக்குவரத்து செயலாளர் உத்தரவு பிறப்பித்தார்.

இதை எதிர்த்து தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தது. நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா இந்த வழக்கை விசாரித்து இடைக்கால தீர்ப்பு வழங்கினார். இந்ததீர்ப்பில் கூறியிருப்பதாவது:

"நோ ஒர்க், நோ பே" என்ற விதிமுறையின் கீழ், போராட்டத்தில் ஈடுபட்டு வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம்பிடித்தம் செய்தது சரி தான். இந்த சம்பளத்தை வழங்கும்படி உத்தரவிட முடியாது.

மேலும் தினக்கூலி அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக வேலை நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி வழக்கு முடிவில் தான்தீர்மானிக்க முடியும் என்று நீதிபதி அந்த தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X