மத்திய அரசுக்கு எதிர்க் கட்சிகள் பச்சைக் கொடி
டெல்லி:
பாகிஸ்தான் மீது மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதாக எதிர்க் கட்சிகள்தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்தைத் தாக்கிய தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை ஏதும் எடுக்காததைச் சுட்டிக்காட்டிய எதிர்க் கட்சிகள், அந்நாட்டுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தேவைதான் என்று கூறின.
பாகிஸ்தானிலிருந்து இந்தியத் தூதரை திரும்ப அழைத்தது, பஸ்-ரயில் போக்குவரத்துக்களை ரத்து செய்தது,தூதரக ஊழியர்களைப் பாதியாகக் குறைத்தது போன்ற மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் வரவேற்றன.
ஆனால் இரு நாடுகளுக்கிடையே போர் மட்டும் வேண்டாம் என்றும் எதிர்க் கட்சித் தலைவர்கள் வாஜ்பாயைக்கேட்டுக் கொண்டனர்.
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதத்தைப் பற்றி விளக்குவதற்கும் ஆலோசனைகளைப் பெறுவதற்கும்முக்கிய நாடுகளுக்கு இந்தியக் குழுவினரை அனுப்புவது குறித்தும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மூத்த எதிர்க் கட்சித் தலைவர்கள் தலைமையில் ஜனவரி 15ம் தேதிக்குள் இக்குழுவினர் வெவ்வேறு நாடுகளுக்குச்செல்லவுள்ளனர் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரமோத் மகாஜன் தெரிவித்தார்.
எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினரைக் குவித்திருப்பது முழுக்க முழுக்க பாதுகாப்பு நடவடிக்கைகக்காகத்தான்என்று இக்கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மீதான கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிர்க் கட்சிகள் முழு ஆதரவைத் தெரிவித்திருப்பதுநாட்டின் ஒற்றுமையை நிலைநிறுத்துவதாக மகாஜன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications