பதற்றம் தணிக்க பாகிஸ்தான் செல்லும் பிரிட்டிஷ் பிரதமர்
இஸ்லாமாபாத்:
இந்திய எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைப்பதற்கு முயற்சி செய்யும் விதமாகப் பேச்சுவார்த்தைநடத்துவதற்காக இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் வரும் 7ம் தேதி பாகிஸ்தான் வரவுள்ளார்.
மேலும் இந்தியாவில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட 20 தீவிரவாதிகள் மற்றும் குற்றவாளிகளின் பட்டியலையும்பாகிஸ்தானிடம் இந்தியா கொடுத்துள்ளது.
இதற்கிடையே எல்லைப் பகுதிகளில் இரு தரப்பிலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல்,இந்திய-பாகிஸ்தான் படையினரிடையே கடுமையான துப்பாக்கிச் சண்டையும் நடந்து வருகிறது.
இந்தத் துப்பாக்கிச் சண்டை எந்த நேரத்திலும் போராக வெடிக்கும் என்ற சூழ்நிலையில், ஒருநாள் பயணமாகபாகிஸ்தானுக்கு வருகிறார் பிளேர்.
இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தற்போது நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை ஓரளவுக்காவதுகுறைக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய நோக்கம் என்று கூறியுள்ளார் பிளேர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் படைக் குறைப்பைப் பற்றி விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும்பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அப்துல் சத்தாருடன் தொலைபேசியில் பேசிய இங்கிலாந்து வெளியுறவுஅமைச்சர் ஜாக் ஸ்ட்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களை பாகிஸ்தான் கைதுசெய்திருப்பதை ஜாக் வரவேற்றார்.
ஆனாலும் பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் இன்னும் அதிகம் உள்ளன என்று கூறிய ஜாக்,அதன் மூலம் இரு நாடுகளும் போரைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு வரும் பிளேர், அப்படியே பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
"சார்க்கில் வாஜ்பாய்-முஷாரப் சந்திக்க வேண்டும்":
சார்க் மாநாட்டின்போது இந்திய-பாகிஸ்தான் பிரதமர்கள் சந்தித்துப் பேச வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைபொதுச் செயலாளர் கோபி அன்னான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் மூலம் தெற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தவிர்ப்பதற்கு இரு நாட்டுத் தலைவர்களும் இந்தவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் கோபி அன்னான் யோசனை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications