For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி: வாஷிங்டன் போஸ்ட்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

தீவிரவாதத்தை பாகிஸ்தான் முழுமையாக கைவிட வேண்டும் என வாஷிங்டன் டைம்ஸ் கூறியுள்ளது.

காஷ்மீர் தீவிரவாதிகள் விவகாரத்தில் அமெரிக்க அரசு டபுள் ஆக்ட் செய்து கொண்டிருந்தாலும் அந் நாட்டுபத்திரிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக உண்மையை ஒப்புக் கொள்ள ஆரம்பித்துள்ளன.

பாகிஸ்தான் அரசுக்கே தெரியாமல் தீவிரவாதிகள் செயல்படுவது போன்ற தோற்றத்தை அமெரிக்க அரசு ஏற்படுத்தமுயன்று வருகிறது. இதையடுத்து தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவின் உதவியே தேவையில்லைஎன்று இந்தியா அறிவித்தது.

இந் நிலையில் காஷ்மீரில் தீவிரவாதத்தை பாகிஸ்தான் அரசும், அந் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயும் தான்தூண்டிவிட்டு வருகின்றன என வாஷிங்டன் டைம்ஸ் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளது.

அமெரிக்காவில் பெருமளவில் வாசிக்கப்படும் இந்த இதழில் கூறப்பட்டுள்ள விவரம்:

காஷ்மீர் பிரச்சனைக்கு மதவாதிகளும் அவர்களின் நெடுநாளைய நண்பருமான பர்வேஸ் முஷாரபும் தான் மிகமுக்கியக் காரணம். 1980ம் ஆண்டிலிருந்தே தீவிரவாதிகளுக்கு உதவும் வேலையை பாகிஸ்தான் அரசும்,ஐ.எஸ்.ஐயும் தொடங்கிவிட்டன.

இந்தியாவில் மட்டுமின்றி ஆப்கானிதானிலும் மதவாதிகளுக்கு பாகிஸ்தானின் ஆதரவு கிடைத்து வந்தது. வருகிறது.

ஆனால், அமெரிக்காவின் மீது தாக்குதல் நடந்த பின்னர் தான் முஷாரபுக்கு நெருக்குதல் வந்தது. தீவிரவாதிகள்பக்கமா இல்லை அமெரிக்கா பக்கமா என்ற நிலை வந்தபோது வேறு வழி ஏதும் இல்லாததால் அமெரிக்காவைஆதரிக்க முஷாரப் ஒப்புக் கொண்டார்.

காஷ்மீர் தீவிரவாதிகள் விவகாரத்திலும் முஷாரப் மீது நெருக்குதல் கொடுத்தால் தான் பிரச்சனையைத் தீர்க்கமுடியும் என்பதை அதிபர் புஷ் உணர்ந்து கொண்டுவிட்டார். முஷாரப் காஷ்மீர் தீவிரவாதிகளை ஆதரிக்கிறாராஇல்லை அமெரிக்காவை ஆதரிக்கிறாரா என்று கேட்கும் நிலை வந்துவிட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் வாஜ்பாய், பர்வேஸ் முஷாரப் ஆகியோரிடம் அதிபர் புஷ்பேசியுள்ளார்.

காஷ்மீர் தீவிரவாதிகளை தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரிப்பது அந் நாட்டுக்கு நல்லதல்ல. இது அந் நாட்டுக்கு மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கும். தீவிரவாதிகளை ஆதரிப்பதை பாகிஸ்தான் முழுமையாக நிறுத்திக் கொள்ளவேண்டும்.

பின்-லேடன் உயிரோடு இருக்கிறான்:

இந் நிலையில் பின் லேடன் உயிருடன் தான் இருக்கிறான் என்பது தெரியவந்துள்ளது.

ஈரானில் இருந்து இது தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. ஈரானில் அல்-கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த இருவர்ரகசியமாய் சாட்டிலைட் தொலைபேசியில் பேசியதை அமெரிக்க ராணுவம் பதிவு செய்துள்ளது.

அதில் பேசிய இருவரும், நாம் பின் லேடனை (வேறு பெயர் சொல்லி குறிப்பிடுகிறார்கள்) டிவியில் தோன்றாமல்பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் நிலை பாதிக்கப்பட்டு பார்க்கவே மிகப் பரிதாபமாக இருக்கிறார். அவரைஇந்தத் தோற்றத்தில் டி.வியில் காட்டுவது நமது ஆட்களின் (அல்-கொய்தா) மனபலத்தை குறைத்துவிடும்.இவ்வாறு அவர்கள் பேசியுள்ளனர். இவர்களை அடையாளம் காண அமெரிக்காவால் முடியவில்லை.

இதனால் பின் லேடன் உயிரோடு தான் இருக்கிறான் என அமெரிக்கா கருதுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X