85 அல்-கொய்தாவினர் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவி கைதான 85 அல்-கொய்தா படையினரை அமெரிக்காவிடம் பாகிஸ்தான்ஒப்படைத்தது.

ஆப்கானிஸ்தானின் தோரா போரா மலைப் பகுதிகளில் அமெரிக்க விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுத்தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத அல்-கொய்தாவினர் அங்கிருந்து தப்பித்து ஓடத் தொடங்கினர்.

பெரும்பாலான அல்-கொய்தா படையினர் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடி வந்தனர். அவர்களைப் பாகிஸ்தான் கைதுசெய்து சிறையிலடைத்தது.

இந்நிலையில் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட அல்-கொய்தாவினரிடம் விசாரணை நடத்துவதற்காகஅவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கேட்டுக் கொண்டது.

அதன்படி பெஷாவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 35 அல்-கொய்தாவினரும் கொஹாட் சிறையில்அடைக்கப்பட்டிருந்த 50 அல்-கொய்தாவினரும் அமெரிக்கா கமாண்டோக்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கொஹாட் விமானத் தளத்திற்குக் கண்களைக் கட்டிக் கொண்டுவரப்பட்ட இந்த 85 அல்-கொய்தாவினரும்அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+