85 அல்-கொய்தாவினர் அமெரிக்காவிடம் ஒப்படைப்பு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவி கைதான 85 அல்-கொய்தா படையினரை அமெரிக்காவிடம் பாகிஸ்தான்ஒப்படைத்தது.
பெரும்பாலான அல்-கொய்தா படையினர் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடி வந்தனர். அவர்களைப் பாகிஸ்தான் கைதுசெய்து சிறையிலடைத்தது.
இந்நிலையில் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட அல்-கொய்தாவினரிடம் விசாரணை நடத்துவதற்காகஅவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கேட்டுக் கொண்டது.
அதன்படி பெஷாவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 35 அல்-கொய்தாவினரும் கொஹாட் சிறையில்அடைக்கப்பட்டிருந்த 50 அல்-கொய்தாவினரும் அமெரிக்கா கமாண்டோக்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கொஹாட் விமானத் தளத்திற்குக் கண்களைக் கட்டிக் கொண்டுவரப்பட்ட இந்த 85 அல்-கொய்தாவினரும்அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications