காஷ்மீர் சட்டசபை அருகே குண்டுவெடிப்பு: 10 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் சட்டசபை அருகே கிரனைட் குண்டு வெடித்தது. இதில் 7 போலீசார் உள்பட 10 பேர்காயமடைந்தனர்.

காஷ்மீர் சட்டசபை மீது 3 மாதங்களுக்கு முன் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 38 பேர்கொல்லப்பட்டனர். இதன் பின்னர் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடந்தது.

இந் நிலையில் இன்று மீண்டும் காஷ்மீர் சட்டசபையின் மெயின் கேட் அருகே மிகப் பெரிய குண்டு வெடித்தது.இதில் 10 பேர் காயமடைந்தனர்.

நேற்றிரவில் காஷ்மீரின் ஆளும்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமானதலிப் ஹூசைனின் வீட்டின் மீது நடந்தது. இதையடுத்து பாதுகாப்புக்கு இருந்த போலீசார் திருப்பிச் சுட்டனர். இந்ததுப்பாக்கிச் சண்டை ஒரு மணி நேரம் நீடித்தது. இதையடுத்துத் தீவிரவாதிகள் தப்பியோடினர்.

அதே போல தானாமாண்டி பகுதியில் நேற்று இரவு ராணுவ முகாமின் மீதும் தாக்குதல் நடந்தது. இதையடுத்துராணுவத்தினர் திருப்பிச் சுட்டனர். இந்த பதிலடியால் தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர்.

காஷ்மீரில் நேற்று இரவில் ராணுவம் நடத்திய பல்வேறு தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல்-முஜாகிதீனின் லோக்கல்கமாண்டர், அவனது பாதுகாப்பு அலுவலர் உள்பட 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+