எல்லையில் துப்பாக்கிச் சண்டை: 17 பாக். வீரர்கள் பலி
ஜம்மு:
ஜம்மு-பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச்சண்டையில் கடந்த 2 நாட்களில் 17 பாகிஸ்தானிய வீரர்கள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உடனே இந்திய வீரர்களும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 11 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் 17 பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.
இந்தியத் தரப்பில் 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர். இந்திய ராணுவத்தினரின் 2முகாம்களுக்கும் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று காலை இரு தரப்பினருக்கும் நடந்த கடும் சண்டையில் 6 பாகிஸ்தானிய வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தின் 8 பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன.
இன்று நடந்த துப்பாக்கிச் சண்டை சுமார் 15 நிமிடங்களுக்கு நிடீத்தது. சிறிய பீரங்கிகள், 122 மிமீ மோர்ட்டார் ரகதுப்பாக்கிகள், கையெறி குண்டுகள் ஆகியவை தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்டன.