குமரிக் கடலில் கொந்தளிப்பு: மீனவர்கள் கவலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன்னியாகுமரி கடலில் சூறாவளிக் காற்று வீசுவதால் மீனவர்களால் மீன் பிடிக்கச் செல்ல முடியவில்லை.
கன்னியாகுமரியில் கடலில் கடும் சூறாவளிக் காற்று வீசுகிறது. இதனால் கடலில் பெரிய பெரிய அலைகள்எழும்புகின்றன.
இந்த சூழ்நிலை காரணமாக மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்துகன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று (புதன்கிழமை) கடலுக்குள் செல்லவில்லை.
கடல் கொந்தளிப்பு காரணமாக விவேகானந்தர் பாறை வரை இயக்கப்படும் படகு சேவையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கடுமையான சூறாவளி காரணமாக இந்தப் படகுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சுற்றுலாவளர்ச்சிக் கழகம் கூறியுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications