வீரப்பனுக்கு இன்னொரு மகள்
தர்மபுரி:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் 2வது மகள் ஜெயலட்சுமியை தர்மபுரியில் தமிழக அதிரடி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தன கடத்தல் வீரப்பன் நடிகர் ராஜ்குமாரை கடத்தியபோது, அவரை மீட்க இரு மாநில அரசுகளும் வீரப்பனுக்குபணம் கொடுத்ததாக சந்தேகிக்கப்பட்டு அதிரடிப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளின் உறவினர்களிடையே போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டு பின் நிபந்தனையின் அடிப்படையில்விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே முத்துலட்சுமி சென்னையில் பங்களா கட்டி வருவதாகவும், தர்மபுரியில் உள்ள இரண்டாவது மகள்ஜெயலட்சுமிக்காக பினாமி பெயரில் சொத்துக்கள் சேர்த்துள்ளதாகவும் அதிரடிப்படைக்கு தகவல் கிடைத்தது.
இது வரை இவருக்கு ஒரு குழந்தை தான் அவளது பெயர் வித்யாராணி என்று முத்துலட்சுமி சொல்லி வந்தார்.
இதையடுத்து தர்மபுரியில் இருந்த ஜெயலட்சுமியை அதிரடி போலீசார் கண்டுபிடித்து, முத்துலட்சுமியிடம்ஒப்படைத்து கண்காணித்து வருகின்றனர்.