ஆண்டிப்பட்டி: தேர்தல் விளம்பரங்களில் புறக்கணிக்கப்படும் தினகரன்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் பிரச்சார விளம்பரங்களில், ஏற்கெனவே இருந்த தினகரன் எம்.பி.யின்பெயர்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
ஆண்டிப்பட்டி தொகுதி இடைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுவதால, தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்துவருகின்றன.
கடந்த ஒரு மாதமாக அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் ஆண்டிப்பட்டியில் குவிந்து தேர்தல் பணியாற்றிவருகின்றனர். நகரின் முக்கிய இடங்களில் உள்ள சுவர்களில் ஜெயலலிதா படத்துடன் தேர்தல் வாசகங்கள்வரையப்பட்டு வருகின்றன.
சென்னையில் இருந்து இதற்காக பெயிண்டர்களை இங்கு வரவழைத்து பிரம்மாண்டமான சுவர் விளம்பரங்களைஅதிமுகவினர் வரைந்து வருகின்றனர்.
அங்து முகாமிட்டிருக்கும் அமைச்சர்களும், அதிமுக விஐபிக்களும் சுவர் விளம்பரங்களில் அம்மா படம்எதிர்பார்த்தபடி அமையவில்லை என்று கருதினர். இதனால் ஏற்கெனவே வரைந்த படங்கள் அழிக்கப்பட்டு,ஜெயலலிதா கும்பிடுவது போன்ற படம் மாற்றி வரையப்பட்டு வருகின்றன.
ஆனால், மாற்றி எழுதப்பட்டு வரும் சுவர் விளம்பரங்களில் தினகரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கத்தமிழ்செல்வன் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இவர்களின் பெயர்கள் விளம்பரங்களில் வரக் கூடாது என அதிமுகதலைமை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் தங்கத்தமிழ்ச் செல்வன், ஜெயலலிதாவுக்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. கட்சியில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த தினகரன் புறக்கணிக்கப்படுவது இதுவேமுதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications