இலங்கைப் பிரதமரைக் கொல்ல ராணுவ அதிகாரி முயற்சி
கொழும்பு:
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயைக் கொல்லும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இலங்கை நாடாளுமன்றத்தின் அருகே உள்ள மில்லினியம் சிட்டியை அடுத்த அத்துருகிரியா அருகே பெரும்அளவிலான ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் நேற்றிரவில் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து ராணுவம் விரைந்து வந்து அந்த இடத்தில் இருந்த ஆயுதங்களைக் கைப்பற்றியது. இந்த ஆயுதங்கள்இலங்கை ராணுவத்துக் சொந்தமானவை. இவை நரேஹென்பிடாவில் உள்ள ராணுவ போலீஸ் மையத்துக்குஎடுத்துச் செல்லப்பட்டன.
மறைந்த போக்குவரத்து அமைச்சர் காமினி அதுகொரலேவுக்கு இறுதியஞ்சலி செலுத்த விக்கிரமசிங்கே உள்ளிட்டதலைவர்கள் நாடாளுமன்றத்துக்கு வர இருந்த நிலையில் இந்த ஆயுதங்கள் பிடிபட்டன.
இது குறித்த ஆரம்ப விசாரணையில் இலங்கை ராணுவத்தின் கேப்டனின் பெயர் அடிபடுகிறது. இவரும் மேலும் சிலராணுவ அதிகாரிகளும் சேர்ந்து ரணில் விக்கிரமசிங்கேயைக் கொல்லத் திட்டமிட்டுள்ள விவரம் விசாரணையில்தெரியவந்தது.
இதையடுத்து விக்கிரமசிங்கேவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புலிகளுடன் அரசு விரைவில் ஒப்பந்தம்:
இந் நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக புலிகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள இலங்கை அரசு முடிவுசெய்துள்ளது என அரசியல் விவகார அமைச்சர் பெரிஸ் கூறினார்.
நேற்று தான் தமிழர் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை இலங்கை அரசு நீக்கியது.