தீவிரவாதிகளை ஒப்படைக்க மாட்டோம்: முஷாரப்
இஸ்லாமாபாத்:
இந்தியா கேட்டுக் கொண்ட 20 தீவிரவாதிகளை ஒப்படைக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ்முஷாரப் கூறினார்.
போதுமான ஆதாரங்களை இந்தியா வழங்கினால் அந்த 20 தீவிரவாதிகள் மீது நாங்களே நடவடிக்கை எடுத்துக்கொள்வோம், ஆனால் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று முஷாரப் கூறினார்.
அப்படியே இந்தியா ஆதாரங்களை அளித்தாலும், அவை பாகிஸ்தான் சட்டப்படி குற்றம் என்றால் மட்டுமேகுற்றவாளிகளை நாங்கள் தண்டிப்போம் என்றும் பாகிஸ்தான் அதிபர் கூறினார்.
இந்தியாவுடன் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இந்தியாதான்பிடிவாதமாக எங்களைத் தாக்குவதிலேயே குறியாக உள்ளது. ஆனால் எங்களுடைய முப்படைகளும் தயாராகவேஉள்ளன. எங்களைத் தாக்கினால் தக்க பதிலடி தருவோம். அதை இந்தியாவால் நிச்சயம் தாங்கிக் கொள்ள முடியாதுஎன்றும் முஷாரப் திமிராகக் கூறியுள்ளார்.
முன்னதாக, போதுமான ஆதாரங்களைத் தந்தால் 20 தீவிரவாதிகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்கத் தயார் என்றுபாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தார் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications