For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

18,000 திடீர் வாக்காளர்கள்: அதிமுக மீது திமுக குற்றசாட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விதிகளுக்குப் புறம்பாக சைதாப்பேட்டை தொகுதியில் திடீரென 18,000 வாக்காளர்கள் பட்டியலில்சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் வரும் பிப்ரவரி 21ம் தேதிஆண்டிப்பட்டி, வாணியம்பாடி மற்றும் சைதாப்பேட்டையில் இடைத் தேர்தல் நடக்கவுள்ளது.

சைதாப்பேட்டை தொகுதியில் புதிய வாக்காளர் பட்டியலில் திடீரென 18,000 வாக்காளர்களை அதிமுக அரசுசேர்த்துள்ளதாகவும் இவர்களை உடனடியாக பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் எனவும் முன்னாள் திமுகஅமைச்சர் பொன்முடி தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:

சைதாப்பேட்டை தொகுதியில் புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணி கடந்த 31ம் தேதி மாலை 5.30 மணியுடன்முடிவடைந்தது.

அப்போது மாலை 5.30 மணிக்கு, 18,000 பேரின் பெயர் பட்டியல்களுடன் வந்து இதையும் வாக்காளர் பட்டியலில்சேர்க்க வேண்டும் என்று அதிமுகவினர் கூறினர்.

அது விதிக்கு புறம்பானது என்று அங்கிருந்த எங்கள் கட்சியினர், வாக்காளர் சேர்ப்பு அதிகாரியிடம் கூறவேஅவர்கள் வாங்க மறுத்து விட்டனர்.

பின்னர் வாக்காளர் கணக்கெடுப்பு அதிகாரிகளின் ஜீப் அன்று மாலையே அதிமுகவைச் சேர்நத சைதை துரைசாமிவீட்டுக்கு சென்று, அந்த 18,000 பேரின் பெயர்கள் விதிக்கு புறம்பான வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய தேர்தல் கமிஷனருக்கு பேக்ஸ் மூலம் புகார் அனுப்பியுள்ளோம். இப்படித்தான் ஆண்டிப்பட்டிமற்றும் வாணியம்பாடி தொகுதிகளிலும் செய்வார்கள். விதிக்கு புறம்பான வகையில் சேர்க்கப்பட்ட அந்தஆயிரக்கணக்கானவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X