பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த முடியாது: வாஜ்பாய்

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு:

எல்லை தாண்டி வந்து பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் தீவிரவாதிகளுக்கு உதவுவதையும், அவர்களுக்கு ஆதரவுதருவதையும் பாகிஸ்தான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அதுவரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைநடத்த நான் தயாராக இல்லை என இந்திய பிரதமர் வாஜ்பாய் திட்டவட்டமாகக் கூறினார்.

சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வாஜ்பாய் நேபாளத் தலைநகர் காத்மாண்டு சென்றுள்ளார். அங்கு இன்று(வியாழக்கிழமை) நிருபர்களிடம் கூறுகையில்,

இந்திய நாடாளுமன்றம், காஷ்மீர் சட்டசபை ஆகியவை மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது இந்தியஜனநாயகத்தின் இதயத்தை தாக்கியது போன்றாகும்.

பாகிஸ்தான் உள்பட சில நாடுகள் தீவிரவாதிகளுக்கு ஆயுதம், பணஉதவி மற்றும் புகலிடம் அளித்து வருகிறது.இந்த போக்கை அந்த நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அமைதியை விரும்பும் அனைத்து நாடுகளும், தீவிரவாதிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் சட்டதிட்டங்களை அமலாக்க வேண்டும்.

தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடுகளை தீவிரவாதத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் நாடுகள் தட்டிக் கேட்கவேண்டும். தீவிரவாதம் குறித்து இந்தியா திரும்ப திரும்ப சுட்டிக் காட்டியபோதெல்லாம் அதை உலக நாடுகள்கண்டுகொள்ளவில்லை. அமெரிக்கா மீது தாக்குதல் நடந்த பின்னர் தான் தீவிரவாதத்தை எதிர்த்து நடவடிக்கைஎடுக்க ஆரம்பித்துள்ளன.

இந்தியாவின் மதசார்பின்மை, சுதந்திரம் ஆகியவற்றை மதத் தீவிரவாதிகளால் ஏற்க முடியவில்லை. இவர்களுக்குசில நாடுகள் போதைப் பொருள் கும்பல்கள், மதவாதிகள், ஹவாலா நோட்டுக் கும்பல், ஆயுதங்கள் நடத்தும்கும்பல்கள் ஆகியவை மூலமாக உதவிகள் செய்து வருகின்றன.

இவ்வாறு வாஜ்பாய் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+