நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்
மும்பை:
ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கியில் ஆள் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் கண்டித்து நாடுமுழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.
சமீபத்தில் மும்பையிலிருந்து 5 ஊழியர்கள் டெல்லிக்கும், கொல்கத்தாவிலிருந்து 22 ஊழியர்கள் சென்னை மற்றும்டெல்லிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.
இவற்றைக் கண்டித்து இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.
வங்கி அதிகாரிகள் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாவிட்டாலும், மற்ற ஊழியர்களின் பணிகளைக் கவனிக்கமுடியாது என்று இவர்கள் கூறிவிட்டனர். இதனால் வங்கிப் பணிகள் இன்று பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
சுமார் 5 லட்சம் வங்கி ஊழியர்கள் இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்கின்றனர்.
ஸ்டாண்டர்ட் சாட்டர்டு வங்கியின் வி.ஆர்.எஸ். திட்டத்தைக் கண்டித்து நேற்று சென்னை பாரிமுனையில்ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.