"செக்ஸ்" டாக்டர் குறித்து புதுவை மாணவர் வாக்குமூலம்
சென்னை:
சென்னை டாக்டர் பிரகாஷ் எடுத்த ஆபாசப் படங்கள், சிடிக்கள், பெண்களை ஏமாற்றியது உள்ளிட்ட பல்வேறுதகவல்களை பாண்டிச்சேரியைச் சேர்ந்த மாணவர் கணேசன் சென்னை 20-வது மாஜிஸ்திரேட் முன்புவாக்குமூலமாக கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த கணேசனும் டாக்டர் பிரகாஷ் தயாரித்த பல ஆபாசப் படங்களில் நடித்துள்ளார்.பிரகாஷின் அனைத்து நடவடிக்கைகளும் தெரிந்தவர்.
மேலும் இவர்தான் முதலில் டாக்டரைப் பற்றி போலீசில் புகார் கொடுத்தார். எனவே இவரது வாக்குமூலம் இந்தவழக்கில் முக்கியமாகக் கருதப்படுகிறது.
இவர் சென்னை 20-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆஜராகி வாக்குமூலம்கொடுத்தார். சுமார் 4 மணி நேரம் வரை இது நீடித்தது.
தன்னை எப்படியெல்லாம் டாக்டர் தனது செக்ஸ் தொழிலுக்காக பயன்படுத்திக் கொண்டார், டாக்டரிடம் ஏமாந்தபெண்கள், அவர் எங்கிருந்து செயல்பட்டு ஆபாசப் படங்களை எடுத்தார் என்பது பற்றி கணேசன் விரிவாகக்கூறியுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications