குணமடைந்த 70 மன நோயாளிகள் தொழில் தொடங்க அரசு உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஏர்வாடியிலிருந்து கொண்டு வரப்பட்டு குணமடைந்து, அவர்களது குடும்பத்தினரால் ஏற்க மறுக்கப்பட்ட 70 மனநோயாளிகளுக்கு சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழகசுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை இன்று (வெள்ளிக்கிழமை) கூறியுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செம்மலை இன்று வருகை தந்தார். மருத்துவமனையைச் சுற்றிப்பார்த்தபின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலிருந்து கொண்டு வரப்பட்ட மன நோயாளிகளில் 33 பேர் முற்றிலும்குணமடைந்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 70 பேர் முற்றிலும் குணமடைந்த போதிலும் அவர்களை ஏற்க அவர்களது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.எனவே அவர்கள் தற்போது மருத்துவமனையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் சாப்பாட்டுக்காகதினசரி ரூ.10.70 செலவிடப்படுகிறது. அதை ரூ.14.50 ஆக அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

2005ம் ஆண்டுக்குள் தமிழகத்தை கண் புரை இல்லா மாவட்டமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.தற்போது 2003ம் ஆண்டுக்குள் அந்த இலக்கை அடைய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதில் முறைகேடுகள் நடப்பதாக அரசுக்குபுகார்கள் வந்துள்ளன. எனவே காவல், பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளதுஎன்றார் செம்மலை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+