சென்னையில் தீ: 35 குடிசைகள் சாம்பல்
சென்னை:
சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 35 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
சென்னையில் உள்ள நொச்சிக்குப்பம் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) காலை ஒரு குடிசை வீட்டில் சமையல்-நடந்து கொண்டிருந்தது. அப்போது அதிலிருந்து கிளம்பிய தீ குடிசையில் பற்றிக் கொண்டது. இந்தத் தீ அருகில்இருந்-த பிற குடிசைகளுக்கும் பரவியது.
இதையடுத்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தரப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயைஅணைத்தனர். இந்த விபத்தில் 35 குடிசைகள் வரை எ-ரிந்து சாம்பலாயின.
தகவல் அறிந்ததும், தமிழ்-நாடு குடிசை மாற்று வா-ரியத் தலைவர் பாலகங்கா, சென்னை மா-நகராட்சி துணை மேயர்கராத்தே தியாகராஜன் ஆகியோர் விரைந்து வந்து குடிசைவாசிகளுக்கு ஆறுதல் கூறினர்.
தீயில் கருகிய குடிசைகளைச் சேர்ந்தவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கவும், தீக்காயம் பட்டவர்களுக்கு மருத்துவச்சிகிச்சை தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications