For Daily Alerts
Just In
ஏப்ரலில் இலங்கை செல்கிறார் ஜஸ்வந்த் சிங்
காத்மாண்டு:
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் வரும் ஏப்ரல் மாதம் இலங்கை செல்லவுள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக ஜஸ்வந்த் சிங் இலங்கைசெல்லவுள்ளார்.
நார்வே தூதுக் குழுவினர் உதவியுடன் விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு விரைவில் பேச்சுவார்த்தையைத்துவக்கவுள்ள சூழ்நிலையில் ஜஸ்வந்த் சிங் இலங்கைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நார்வே தூதுக் குழுவினர் நடத்தவுள்ள பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசு ஏற்கனவே தன்னுடைய ஆதரவைத்தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஆதரவைக் கேட்பதற்காக கடந்த ஆண்டு இறுதியில் இலங்கைப் பிரதமராகப் பதவியேற்றவுடன்ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Friday, January 4, 2002, 5:30 [IST]