முஷாரப் வருவதில் தாமதம்: சார்க் மாநாடு நாளைக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு:

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இன்று தொடங்குவதாக இருந்த தெற்காசிய நாடுகளின் 11வது சார்க் மாநாடு,பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் வருவதில் தாமதமானதால், நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவின் மீது பறக்கத் தடை விதிக்கப்பட்டுவிட்டதால், சீனாவை சுற்றிக் கொண்டுமுஷாரபின் விமானம் நேபாளம் வந்து கொண்டுள்ளது. இந்த விமானம் சீனாவில் தரையிறங்கியது.காத்மாண்டுவில் பெரும் பனி மூட்டம் இருப்பதால் அவரது விமானம் வந்து இறங்க முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.

இதனால், சீனாவிலேயே அவரது விமானம் நின்று கொண்டிருந்தது. பிற்பகலில் பனி மூட்டம் விலகியதையடுத்து3.30 மணிக்குத் தான் அவர் நேபாளம் வந்து சேர்ந்தார்.

முன்னதாக முஷாரபின் விமானத்துக்கு அனுமதித் தர இந்தியா முன் வந்தது. ஆனால், அதை பாகிஸ்தான்நிராகரித்தது. சீனா வழியாக நேபாளம் வந்து கொள்வதாக முஷாரப் கூறிவிட்டார்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மாலத்தீவுகள், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளைக் கொண்டசார்க் அமைப்பு நாடுகளின் 3 நாள் உச்சி மாநாடு இன்று தொடங்குவதாக இருந்தது. முஷாரப் வராததால்பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், அவர் பிற்பகலிலும் வந்து சேரவில்லை. மாலை தான் அவர் வருவார் எனத் தெரிகிறது. இதனால்மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சி நாளை காலை 11.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று திட்டமிட்டபடி மாநாடு தொடங்கியிருந்தால் மாலையில் அனைத்துத் தலைவர்களும் காத்மாண்டுவில்இருந்து 40 கி.மீ. தொலைவில் நாகர்கோட்டில் உள்ள ஒரு மலைப் பகுதி விடுதியில் சந்தித்துப் பேசுவதாகதிட்டமிடப்பட்டிருந்தது. அப்போது இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் பர்வேஸ் முஷாரபும் சந்தித்துப் பேச வேண்டிவந்திருக்கும்.

முஷாரப் வந்து சேராததால் இந்தக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதனால், வாஜ்பாய்-முஷாரப்இருவரும் தனியே சந்திக்க வாய்ப்பேயில்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

இதில் 7 நாடுகளில் தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்தியாவின் சார்பில் பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தான்சார்பில் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப், இலங்கை சார்பில் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, மாலத்தீவுஅதிபர் முகம்மத் கயூம், பங்களாதேஷ் அதிபர் பேகம் கலிதா ஜியா, பூடான் மன்னர் வாங்சுக், நேபாள பிரதமர் நர்பகதூர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இப்போது சார்க் அமைப்பின் தலைவராக சந்திரிகா குமாரதுங்கா உள்ளார். இந்தப் பதவியை அவர் நேபாளப்பிரதமரிடம் இம் மாநாட்டில் அவர் ஒப்படைப்பார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சார்க் மாநாடு கூடுவதுமிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இம் மாநாட்டில் தீவிரவாதம் குறித்து தான் இந்தியா பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+