வீரப்பன் காட்டில் சுடப்பட்டு இறந்த ஆதிவாசி யார்? குழப்பம் நீடிக்கிறது
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோவை மாவட்டம் ஆணைக்கட்டி காட்டுப் பகுதியில் சிறப்பு அதிரடிப்படை போலீஸாரால் சுடப்பட்டு இறந்தஆதிவாசி நபர் யார் என்று இன்னும் தெரியவில்லை.
ஆணைக்கட்டி காட்டுப் பகுதியில் மாங்கரை என்ற இடத்தில் கடந்த திங்கள்கிழமை ஒரு கும்பல் நடமாடிக்கொண்டிருந்தது. அவர்களைப் பார்த்த அதிரடிப்படை போலீசார் அவர்களைப் பிடிக்க முயன்றனர்.
அப்போது அந்தக் கும்பல் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. போலீசார் திருப்பிச் சுட்டதில் ஒரு நபர்இறந்தார். மற்றவர்கள் தப்பி விட்டனர்.
இறந்த நபர் ஒரு ஆதிவாசி என்று மட்டும் தெரிய வந்தது. அவர் யார் என்று தெரியவில்லை. அந்த ஆதிவாசிகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
அந்தக் கும்பல் யானையை வேட்டையாட வந்த கும்பலாக இருக்கும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications