ஆண்டிப்பட்டியில் போலி வாக்காளர்கள்: தேர்தல் கமிஷன் விசாரிக்கும்
சென்னை:
ஆண்டிப்பட்டி மற்றும் சைதாப்பேட்டை சட்டசபைத் தொகுதிகளில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகதலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் கொடுத்ததால், சம்பந்தப்பட்ட தொகுதிகள் அடங்கிய மாவட்டஆட்சியர்களின் கூட்டத்தை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சாரங்கி அழைத்துள்ளார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் 11,000 போலி வாக்காளர்களும், சைதாப்பேட்டை தொகுதியில் 18,000 போலிவாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சைதாப்பேட்டையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதிமுக மாவட்ட செயலாளரின் வீட்டிற்கு நேரில் சென்று போலிவாக்காளர்கள் விண்ணப்பங்களை வாங்கிக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தலைமைத் தேர்தல் ஆணையரிடம் திமுகசார்பில் எம்.பிக்கள் செ.குப்புசாமி, சி.பி.திருநாவுக்கரசு ஆகியோர் புகார் மனு கொடுத்தனர்.
இந்தப் புகார் குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கிக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் தகவல்தெரிவித்தது.
இதையடுத்து புகார் குறித்து விசாரிப்பதற்காக 3 மாவட்ட ஆட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு சாரங்கி ஏற்பாடுசெய்துள்ளார்.